புதிய எம்பிக்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் அளித்தார் தலைமை தேர்தல் ஆணையர்

பாராளுமன்ற தேர்தலில் வென்றவர்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
புதிய எம்பிக்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் அளித்தார் தலைமை தேர்தல் ஆணையர்
Published on

புதுடெல்லி:

ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து, 16வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வென்ற எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com