சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ. 14 கோடி; இந்தியாவிற்கு ரூ. 7 கோடி

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ. 14 கோடி; இந்தியாவிற்கு ரூ. 7 கோடி

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் அணிக்கு 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தியா 7 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
Published on

இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை 4.5 மில்லியன் டாலராகும். இதில் சாம்பியன்ஸ் பட்டம் வெல்லும் அணிக்கு 2.2 மில்லியன் டாலர் (சுமார் 14 கோடி ரூபாய்), 2-வது இடம்பிடிக்கும் அணிக்கு 1.1 மில்லியன் டாலர் (சுமார் 7 கோடி ரூபாய்) பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

அதன்படி பாகிஸ்தான் அணிக்கு 14 கோடி ரூபாயும், இந்தியாவிற்கு 7 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு தலா 0.45 மில்லியன் டாலர் (3 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com