37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

ஆட்டம் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் பெனால்டிஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 1-3 என தோல்வியடைந்தது.