திசையன்விளையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 18 பேர் மீது வழக்கு

போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அரசு ராஜா உள்பட 18 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்தனர்.
திசையன்விளையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 18 பேர் மீது வழக்கு
Published on

திசையன்விளை:

இந்து தெய்வங்களை பற்றி அவதூறாக பேசிய மோகன் சி.லாசரசை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் திசையன்விளை நேரு திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, திசையன்விளை நகர பொதுச்செயலாளர் கணேச மூர்த்தி, நகர தலைவர் விக்னேஷ், ராதாபுரம் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜன், விஸ்வ இந்து பரி‌ஷத் மாநில செயற் குழு உறுப்பினர் முருகையா, நகர செயலாளர் நாகராஜன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ரெங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அரசு ராஜா உள்பட 18 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com