

அப்போது முத்தலாக் என்பது சட்ட விரோதம். இதை தடுப்பதற்கு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
கடந்த வாரம் வியாழக்கிழமை மக்களவையிலும், இந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையிலும் முத்தலாக் மசோதா நிறைவேறியது. அதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.