ஈரோட்டில் மண்ணுக்குள் சிக்கி தவித்த அரசு பஸ்- கிரேன் மூலம் மீட்பு

ஈரோட்டில் இன்று காலை மண்ணுக்குள் அரசு பஸ் வசமாக சிக்கி கொண்டது. உடனே கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ் மீட்கப்பட்டது.
ஈரோட்டில் மண்ணுக்குள் சிக்கி தவித்த அரசு பஸ்- கிரேன் மூலம் மீட்பு
Published on

ஈரோடு:

சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் 8.30 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே சத்தி ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

அப்பகுதியில் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணி முடிந்து குழி மண்ணால் மூடப்பட்டிருந்தது.

இந்த மூடப்பட்ட மண் குழியில் அரசு பஸ் வசமாக சிக்கி கொண்டது. பஸ்சின் டயர்கள் மண்ணில் புதைந்ததால் பஸ்சை எடுக்க முடியாமல் டிரைவர் தவித்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டன.

பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ் மீட்கப்பட்டது. சுமார் முக்கால் மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. 

X

Maalai Malar
www.maalaimalar.com