பந்தலூரில் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்கு17 வயதும், 2-வது மனைவிக்கு பிறந்த மகளுக்கு 13 வயதும் ஆகிறது.

இந்த நிலையில் தனது தங்கையை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் சித்தி தேவாலா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

X

Maalai Malar
www.maalaimalar.com