ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா வந்தவர் பீகாரில் பிணமாக தொங்கினார்

ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 33 வயது நபர் பீகார் மாநிலம், புத்த கயாவில் ஒரு மரத்தில் இன்று பிணமாக தொங்கினார். #Australianman #BodhGaya
ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா வந்தவர் பீகாரில் பிணமாக தொங்கினார்
Published on

பாட்னா:

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அருகேயுள்ள வெஸ்ட்மீட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீத் அல்லென்(33). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஹீத், சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் வந்திருந்தார்.

இந்நிலையில், இங்குள்ள புத்த கயா பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.

ஹீத் அல்லென் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் தனது மரணம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது சகோதரிக்கு தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார். #BodyofAustralianman #Australianman #HeathAllan  #BodhGaya

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com