நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்- திருச்சியில் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. #BabriMasjiddemolition
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்- திருச்சியில் பலத்த பாதுகாப்பு
Published on

கே.கே.நகர்:

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் கூடுதலாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். நடைமேடைகளில் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர். ஓடும் ரெயிலிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.  #BabriMasjiddemolition

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com