முக்கொம்பில் புதிய அணை கட்டவேண்டும்- அய்யாக்கண்ணு பேட்டி

இடிந்த பகுதிகளை அகற்றிவிட்டு முக்கொம்பில் புதிய அணை கட்டவேண்டும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #mukkombu
முக்கொம்பில் புதிய அணை கட்டவேண்டும்- அய்யாக்கண்ணு பேட்டி
Published on

திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததால் புள்ளம்பாடி, பெருவளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அணையின் மதகுகள் உடைந்ததால் பாதிப்பில்லை என்று அதிகாரிகள் கூறுவது தவறு.

லால்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும். 182 ஆண்டுகள் பழமையான அணையை முறையாக பராமரிக்காததே மதகுகள் உடைய காரணமாகும். கொள்ளிடம் பழைய பாலத்தை ஆய்வு செய்து புதிய பாலம் ஏற்கனவே கட்டியிருக்க வேண்டும்.

வாய்க்கால் சீரமைப்பு, ஆறுகள் இணைப்பு, புதிய தடுப்பணைகள் கட்டுதல், மேலணை கட்டுதல் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசை பல்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால் தமிழக அரசு அதனை பரிசீலித்து கவனிக்காமல் விட்டதே இதுபோன்ற நிகழ்வுக்கு காரணம்.

ஜெயலலிதாஆட்சிக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்  காலத்தில்  கட்டப்பட்டிருந்த பழைய இரும்பு பாலத்தின் தூர்ந்து போன, பலவீன மடைந்த நிலையை கருத்தில் கொண்டு அதன் அருகிலேயே நேப்பியர் பாலம் வடிவில் புதிய பாலத்தை கட்டினார். அதேபோல் முக்கொம்பு பாலத்தையும் தற்போதைய தமிழக அரசு புதிதாக கட்டியிருக்க வேண்டும். எனவே இனியும் மெத்தன போக்கை காட்டாமல் மேட்டூர் அணையை போன்று சாதக, பாதகங்களை பரிசீலித்து முக்கொம்புவில் புதிய பாலத்தை கட்டவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #mukkombu

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com