

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அதேசமயம், அயோத்தி வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.
ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய இந்த மத்தியஸ்த குழு, பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு ஏற்கேனவே இடைக்கால அறிக்கை தாக்கல் செய்திருந்தது. மத்தியஸ்த குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.