உலக கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா இடம் பெற வாய்ப்பு

உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க அஸ்வின், ஜடேஜாவுக்கு இடம் பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.
உலக கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா இடம் பெற வாய்ப்பு
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டி அணியில் இருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டு விட்டனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் மிரட்டி வருவதால் இப்போதைக்கு அஸ்வின்-ஜடேஜாவுக்கு குறுகிய வடிவிலான போட்டியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ‘சாஹலும், குல்தீப் யாதவும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் துருப்பு சீட்டாக இருப்பார்கள்’ என்று இந்திய கேப்டன் கோலியும் கூறி விட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com