

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் நீரஜ் குமார் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான சலாரி பாதல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அவரது வீட்டின் அருகே நீரஜ் குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், ராணுவ அதிகாரியின் மர்ம மரணம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர் நீரஜ் குமாரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.
சமீபத்தில் இதேபோல் விடுமுறைக்குச் சென்ற ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.#ArmyManDead