அந்தியூர் அருகே பி.எஸ்.என்.எல். டவரில் கேபிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

அந்தியூர் அருகே பி.எஸ்.என்.எல். டவரில் கேபிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே பி.எஸ்.என்.எல். டவரில் கேபிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
Published on

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் உள்ளது.

இந்த டவரில் கேபிள், பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தன. ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள இந்த கேபிள், பேட்டரி திருடப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பவானி கோட்ட பி.எஸ்.என்.எல். துணை மேலாளர் மூர்த்தி புகார் செய்தார். கேபிள், பேட்டரி திருடியவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகு மார் மற்றும் போலீசார் செம்புளிச்சான்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கிணறு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் அந்தியூர் மொடக்குறிச்சானூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (31), கொமராபாளையம் தட்டான் குட்டையை சேர்ந்த சங்கர் (25) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் தொடர்ந்து விசாரித்தபோது ஸ்ரீதரும், சங்கரும் பி.எஸ்.என்.எல். டவரில் கேபிள், பேட்டரி திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பி.எஸ். என்.எல். டவரில் இருந்து திருடிய பேட்டரி, கேபிள் ஆகியவற்றை பழைய இரும்புக்கடையில் விற்றுள்ளனர்.

ஸ்ரீதர் ஏற்கனவே பழைய இரும்புக்கடை நடத்தி வந்தவர். அவரது கடையில் சங்கர் வேலை பார்த்தார். அந்த பழக்கத்தை தொடர்ந்து அவர்கள் இப்போது திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

சங்கர் கடந்த 2014-ம் ஆண்டில் திருட்டு வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com