இமாச்சல பிரதேசத்தில் 2 சக வீரர்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்

இமாச்சலா பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாமில் சக ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து வீரர் ஒருவர் தாமும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #HimachalPradesh #ArmyJawanSuicide
இமாச்சல பிரதேசத்தில் 2 சக வீரர்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்
Published on

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் உள்ள ராணுவ வீரர்களில் ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கியால் தனது இரு சக ராணுவ நண்பர்களை சுட்டுக்கொலை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த ராணுவ வீரரும் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இறந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகவும், ராணுவ வீரரின் இந்த நடவடிக்கைக்கான காரணம் தொடர்பாகவும் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #HimachalPradesh #ArmyJawanSuicide

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com