அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 6 பேர் பலி

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்து விழுந்ததால் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 6 பேர் பலி
Published on

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்து விழுந்ததால் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரெயில்வே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆம்ட்ராக் என்பது அமெரிக்காவில் பொது நிதியில் இயக்கப்படும் ஒரு ரயில்வே நிறுவனம்.

சியாட்டில் பகுதியில் இருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பயணம் செய்தனர்.

சியாட்டிலில் இருந்து புறப்பட்ட சிறிது தொலைவில் ஆம்ட்ராக் ரெயில் ஒரு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரெயில் தடம் புரண்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்து ரெயில் பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்  
சேர்த்து வருகிறோ. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com