அண்ணாநகர் அருகே ஆவின் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை

ஆவின் நிறுவன பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்தார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணாநகர் அருகே ஆவின் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை
Published on

மதுரை:

மதுரை மானகிரி செல்லாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துமீனாட்சி (வயது39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

முத்துமீனாட்சியின் தந்தை மலைச்சாமி சாத்தமங்கலம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றினார். பணியில் இருந்தபோது அவர் இறந்து விட்டதால் முத்துமீனாட்சிக்கு வாரிசு வேலை கிடைத்தது.

இதனால் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த முத்துமீனாட்சிக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 9-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித் ஜீதும் பலனின்றி நேற்று இரவு முத்துமீனாட்சி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com