கொல்கத்தா மேம்பால விபத்தின் எதிரொலி - மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் 7 மேம்பாலங்கள்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வில் 7 மேம்பாலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kolkata
கொல்கத்தா மேம்பால விபத்தின் எதிரொலி - மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் 7 மேம்பாலங்கள்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 4-ம் தேதி மேஜெர்ஹட் என்ற மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுப்பணித்துறை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இதர மேம்பாலங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கொல்கத்தாவில் உள்ள 20 மேம்பாலங்களில் 7 மேம்பாலங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாலங்களில் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுப்பணித்துறை குறிப்பிட்ட 7 மேம்பாலங்களில் 4 பாலங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்தனர். இருப்பினும், இரவு நேரங்களில் அந்த மேம்பாலங்களில் சரக்கு வாகனங்கள் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த மேம்பாலங்களை சீர்செய்வதற்கு பல கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும், அதற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ஏலம் விடப்பட்டு மிக விரைவில் அனைத்து மேம்பாலங்களும் சீர் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Kolkata

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com