ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு - தேனி மாவட்டத்தில் 400 மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் 400 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு - தேனி மாவட்டத்தில் 400 மருந்து கடைகள் அடைப்பு
Published on

தேனி:

இந்தியா முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு ஊக்குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மருந்து கடை உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.

தமிழகத்தில் 12 மணி நேரம் மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று மருந்து வணிகர் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. நகர் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com