சின்னமுட்டம் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத யானை திருக்கை மீன்

சின்னமுட்டம் மீனவர் வலையில் 3 டன் எடையுள்ள ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியது.
திருக்கை மீன்
திருக்கை மீன்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம். இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்ட 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்து அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால் விசைப்படகுகள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க சென்று வருகின்றன.

அவ்வாறு விசைப்படகில் பிடிக்கப்பட்டு வரும் மீன்கள் ஏலக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு பெரிய மற்றும் சிறிய மீன்கள் என தரம் பிரித்து தனித்தனி ஏலக்கூடத்தில் வைத்து விற்பனை செய்யப்படுகின் றன. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாபாரிகள், தொழிலாளர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வருகை இல்லாதால், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்கிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை கடலுக்கு சென்ற விசைப்படகுகள் இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்பின. அதில் ஒரு விசைப்படகில் 3 டன் எடை கொண்ட ராட்சத யானை திருக்கை மீன் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இந்த மீன் கயிறுகள் மூலம் கட்டி துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com