

இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் சாலை விபத்துகளிலும், உடல் நலக்குறைவாலும், தற்கொலை செய்தும் மரணம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு கடந்த நான்காண்டுகளில் வளைகுடா நாடுகளில் 28 ஆயிரத்து 523 இந்தியர்கள் உயிரிழந்ததாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் இதற்கான புள்ளி விபரங்களை தெரிவித்தார்.