செல்போன் வாங்கி தருவதாக ஏமாற்றி 2 தலித் சிறுமிகளை கற்பழித்த வாலிபர்கள்

கேரளா அருகே தலித் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் மீது போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செல்போன் வாங்கி தருவதாக ஏமாற்றி 2 தலித் சிறுமிகளை கற்பழித்த வாலிபர்கள்
Published on

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மன்னந்தவாடியைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுமியும், அவரது 14 வயது தோழியும் கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்கள்.

2 நாள் கடந்த நிலையில் அவர்கள் மன்னந்தவாடியை அடுத்த சுல்தான் பத்தேரியில் தனியாக தவித்தப்படி நின்றனர். அவர்களை போலீசார் மீட்டு சென்று விசாரித்தனர்.

இதில், 2 சிறுமிகளையும் அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் ஊட்டிக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. சிறுமிகளுக்கு செல்போன் வாங்கி தருவதாக ஆசைக்காட்டி அவர்களை வாலிபர்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

ஊட்டி சென்ற பின்பு அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து 17 வயது சிறுமியை அவர்கள் கற்பழித்தனர். 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

மறுநாள் சிறுமிகள் இருவரையும் சுல்தான் பத்தேரியில் இறக்கி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பாக சிறுமிகளின் உறவினர்கள் மன்னந்தவாடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் தலித் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 வாலிபர்கள் மீது போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவான வாலிபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com