தெலுங்கானாவில் 100 நாள் வேலை திட்டப்பணியின்போது மண் சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி

தெலுங்கானாவில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றியபோது மண் சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமுற்றார்.#RuralWorkPlan #MudAccident
தெலுங்கானாவில் 100 நாள் வேலை திட்டப்பணியின்போது மண் சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி
Published on

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுள் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள நாராயண்பேட் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் மக்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இவ்விபத்து குறித்து  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், ‘இந்த கொடூர சம்பவத்தை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது துரதிர்ஷ்டவசமானது. இதில் படுகாயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய வேண்டும்’ என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #RuralWorkPlan #MudAccident

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com