காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பவினா படேல்

இறுதிச் சுற்றில் நைஜீரிய வீராங்கனை தோல்வி.காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 13 தங்கம் வென்றுள்ளது.
பவினா படேல்
பவினா படேல்
Published on

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இதில் பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பவினா படேல், நைஜீரிய வீராங்கனை இஃபேச்சுக்வுடே இக்பியோ வை எதிர் கொண்டார். இப்போட்டியில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பவினா படேல் தங்கப்பதக்கம் வென்றார். 

இதே பிரிவில் இந்திய வீராங்கனை சோனல்பென் படேல், இங்கிலாந்தின் சூ பெய்லியை 3-5 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இது எனது முதல் பதக்கம் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் இந்தப் பதக்கத்தை எனது கணவர், குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றும் சோனல்பென் படேல் தெரிவித்துள்ளார். இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை 13 தங்கம் வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com