என் பெயர் காவிரி

தமிழகத்தின் எல்லை என்னை வரவேற்றது. எனக்கு ஒரு கோவிலும் உண்டு.
என் பெயர் காவிரி
Published on

என் பெயர் தான் காவிரி. எனக்கு பொன்னி என்றும் பெயர் உண்டு. பொன் போன்ற நெற்கதிரை விளைவிப்பதால் எனக்கு அப்படியொரு பெயர். காவிரி என்ற பெயர் கூட காரணப் பெயர் தான். கா என்றால் சோலை விரி என்றால் பரப்புதல் இருமருங்கும் சோலைகளை பரப்பி வருவதால் நன் காவிரி ஆனேன்.

கருநாடகமே என் தாய்வீடு. அங்குள்ள "குடகு" மலைப் பகுதியில் "மெர்க்காரா" என்னும் இடத்தில் தோன்றுகிறேன். அங்கிருந்து ஓடிவந்து "திருக்குளத்தில்" தங்குகிறேன் அதற்கு "தலை காவிரி" என்று பெயர். இங்கு எனக்கு ஒரு கோவிலும் உண்டு. எவ்வளவு நாள் தான் அங்கேயே தங்க முடியும்?

எனக்கோ சோழ நாட்டை பார்க்க வேண்டுமென்று ஆசை. என் பயணத்தை தொடங்கினேன். வரும் வழியில் என்னை சிறை வைத்தார்கள். அந்த இடத்திற்கு "கிருஷ்ணராஜாசாகர்" என்று பெயர். தடுத்த அவர்களுக்கு தண்ணீரையும் மின்சக்தியையும் அளித்தேன் அதில் அவர்கள் மயங்கி விட்டார்கள் போலும். ஒடி வந்து என்னை திறந்து விட்டனர். எனக்கோ மகிழ்ச்சி வெள்ளம். ஆனந்த கூத்தாடி கொண்டு கீழ்த்திசை நோக்கி ஓடினேன்.

தமிழகத்தின் எல்லை என்னை வரவேற்றது. நன் அடைந்த இன்பத்திற்கு எல்லையே இல்லை. இன்னும் சில நாட்களில் சோழ நாட்டை அடைந்து விடலாம். கவலை இல்லை என்று எண்ணி கொண்டு தளர் நடை போட்டேன். கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்ததால் காலில் வலி. மேட்டிலும் பள்ளத்தில் குதித்தல் உடம்பிலும் வலி. எங்காவது ஒய்வெடுத்துச் சென்றால் இதமாக இருக்கும் என்று உள் மனம் எண்ணிற்று. அதற்கு ஏற்றது போல் சேலம் மாவட்டத்து மக்கள் எனக்கு "மேட்டுரில்" எனக்கொரு மாளிகை கட்டி வைத்திருந்தார்கள். அப்பப்பா மாளிகையா அது மாமனார் கோட்டை போலிருந்தது.

அங்குச் சில நாட்கள் ஓய்வெடுத்தபின் , என் பயணத்தை மீண்டும் தொடங்கினேன். "பவானி,நொய்யல்" என்னும் தோழிகளும் என்னோடு சேர்ந்து கொண்டனர். என் மகிழ்ச்சியை கேட்க வேண்டுமா ? பரந்து திரிந்து பாடி நடந்த என்னை 'அகன்ற காவிரி' என்று அன்புடன் அழைத்தனர். என் பருவமும் உருவமும் பார்ப்பதற்கு அப்படி தான் இருந்தது.

என் வேகமான நடை சில மணி நேரத்திற்குள் "தோகூர்" என்னும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து. இந்த இடத்தில் தான் கரிகால மன்னன் எனோக்கோர் உப்பரிகையைக் கட்டி வைத்திருக்கிறான். அதற்கு கல்லணை என்று பெயர். மேட்டூரும் கிருஷ்ணராஜாசாகர் முளைப்பதற்கு முன்னால் இது முளைத்து விட்டது. இதன் வைத்து ஈராயிரம் ஆண்டுகள் . இன்று கட்டியது போல் எத்துனை அழகு! தமிழர்களின் கட்டடக்கலை நுட்பத்திற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

"பட்டுக்கோட்டை" மக்களின் பரிதாபத்தை தீர்ப்பதற்கு என் அருமை தங்கை ஒருத்தியைக் கல்லணை கால்வாய் மூலம் அனுப்பி வைத்தேன். பின் திருகாட்டுப்பள்ளியில் இன்னொரு தங்கையாம் வெண்ணையாற்றை வேறொரு பக்கம் அனுப்பி வைத்தேன். அதன்பின் திருவையாறு , குடந்தை , மயிலாடுதுறை வழியாக பூம்புகாரை அடைந்தேன். ஓடி ஓடி வந்ததால் உள்ளமும் களைத்தது ; உடம்பும் இளைத்தது. இங்கு "ஆடு தாண்டவம் காவிரி " என்று அழைக்கப்பட்டேன். யார் எப்பெயரால் அழைத்தால் எனக்கென்ன? வங்கக் கடலில் என் சங்கமம் முடிந்தது. சோழ நாட்டு பயணம் மகிழ்ச்சியாக அமைந்தது.

(படித்ததில் பிடித்தது)

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com