மனிதனுக்கு மட்டும் ஏன் சிசேரியன்?

தமிழ்நாட்டில் 99.98% பிறப்புகள் மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன. இயற்கை பெர்பெக்ட் என நம்புவது எல்லா விசயத்துக்கும் பொருந்துவதில்லை.
மனிதனுக்கு மட்டும் ஏன் சிசேரியன்?
Published on

மனிதனை தவிர 84 லட்சம் வகை உயிரினங்களுக்கும் இயற்கை பிரசவம் தான். மனிதனுக்கு மட்டும் ஏன் சிசேரியன்? என கேட்பவர்கள் உள்ளனர். ஆனால் அந்த 84 லட்சம் (!) உயிரினங்களில் எத்தனை தாய் உயிர்கள், பிரசவ சமயம் பலியாகிறது என சொல்வதில்லை.

உதாரணமாக கழுதைப்புலியின் பிரசவம் வலி மிகுந்தது. பல சமயம் பிறப்புறுப்பே கிழிந்து பேறுகாலத்தில் சுமார் 18% கழுதைப்புலி தாய்கள் உயிரிழக்கும். பிற மிருகங்களின் கர்ப்பகால மரணவிகிதம் செம்மறி ஆடு 1.6%, மாடு 3%, ஆடு 2.6%.

தமிழ்நாட்டில் கர்ப்பகால மரணவிகிதம் 0.06% மட்டுமே.

தமிழ்நாட்டில் 99.98% பிறப்புகள் மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிக விகிதம் இது. இங்கே கர்ப்பகால மரணவிகிதம் லட்சத்துக்கு 62 தாய்மார்கள் மாத்திரமே

இயற்கை பெர்பெக்ட் என நம்புவது எல்லா விசயத்துக்கும் பொருந்துவதில்லை. பல விசயங்களுக்கு இயற்கை வைத்துள்ள தீர்வு வலியும், மரணமுமே. இவை இரண்டும் இயற்கையே. அதற்கு தீர்வு காண மனிதன் முயன்றே மானுட சமுதாயம் இந்த அளவு உயர்ந்துள்ளது.

- நியாண்டர் செல்வன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com