பங்குனி உத்திர விரதத்தை எந்த வயதினர் அனுஷ்டிக்க வேண்டும்...

ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும். தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திர விரதத்தை எந்த வயதினர் அனுஷ்டிக்க வேண்டும்...
Published on

பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. இந்த நாளில் தான் சிவன்-பார்வதி, ராமன்- சீதை, கிருஷ்ணா்-ருக்மணி, முருகன்-தெய்வானை உள்பட பல தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பை விட குறைவாக சாப்பிட வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய உணவை, ஒரு வேளை மட்டும் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். அல்லது மூன்று வேளையும் பழச்சாறு அருந்தலாம். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை சாப்பிடலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் அல்லது, சிவன், பெருமாள் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும்.

பங்குனி உத்திரத்தன்று காலைக்கடனை முடித்து விட்டு, பூஜை பாராயணங்களை செய்ய வேண்டும். அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள், வேலை செய்தபடியே 'ஓம் சரவண பவ' என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்து வரலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

வயதான தம்பதியரை இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு பூஜை செய்து, தாம்பாளத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். அன்னதானமும் அளிக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருத்தல் வேண்டும்.

பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். மாலையில் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு, இரவில் பால், பழம் உண்டு விரதத்தை முடிக்கலாம். இவ்வாறு தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடித்து வந்தால், அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவி கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com