search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆனி செவ்வாய் விரதம்: துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றினால்...
    X

    ஆனி செவ்வாய் விரதம்: துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றினால்...

    • ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும்.
    • எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார்.

    தமிழ் மாதங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்குச் சிறப்புக்குரிய மாதங்களாகக் கருதப்படுகிறது. அதில் ஆனி மாதமும் மற்றும் ஆடி மாதமும் அம்மனுக்குரிய சிறப்பு மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என ஆன்மீகம் கூறுகிறது.

    ஆனி மாதம் பிறந்து விட்டாலே அது அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. ஆனி மாதம் என்பது வைணவம் மற்றும் சைவம் பாகுபாடுகள் இல்லாமல் எல்லா பெண் தெய்வங்களையும் கொண்டாடக் கூடிய சிறப்பு மாதமாகும். இந்த மாதத்தில் பராசக்தியாக விளங்கக்கூடிய அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

    பராசக்தியை வழிபாடு செய்யும்பொழுது நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகி விடுவார்கள் என ஆன்மீகம் கூறுகிறது. அதேபோல் நடராஜரை வணங்கக்கூடிய சிறப்பு மாதமாக இந்த ஆனி மாதம் கருதப்படுகிறது.

    இறைவனை வணங்குவதற்குத் தனிப்பட்ட ஸ்லோகங்கள் எதுவும் கிடையாது. மனதார நினைத்துக் கொண்டு மனதில் தோன்றக்கூடிய வேண்டுதல்களை வைத்து இறைவனை வழிபட்டாலே அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.

    ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும். சாந்தமான தெய்வங்கள் முதல் உக்கிரமான தெய்வங்கள் வரை அனைத்து தெய்வங்களையும் விரதம் இருந்து வழிபடுவதற்கு உரியத் தினமாக இந்த செவ்வாய்க்கிழமை விளங்குகிறது.

    அதேசமயம் துர்க்கை அம்மனை வேண்டி செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும். செவ்வாய்க்கிழமை என்று விரதம் இருந்து ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்று வழிபட்டால் துஷ்ட சக்திகள் இருந்து விடுபடலாம் என கூறப்படுகிறது.

    எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆனி செவ்வாய் திருநாளில் பராசக்தியின் அவதாரமாக விளங்கக்கூடிய அனைத்து அம்மனையும் மனதார நினைத்து வழிபட்டு விரதம் இருந்தால் மங்கள காரியங்கள் உண்டாகும் எனும் கூறப்படுகிறது.

    அதேசமயம் கிராமத்தில் இருக்கக்கூடிய தெய்வங்களையும், எல்லையைக் காக்கக்கூடிய தெய்வங்களையும் வீட்டில் இருந்தபடியே வழிபட்டால் இன்னல்கள் விலகும் எனக் கூறப்படுகிறது.

    Next Story
    ×