search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    பிள்ளைகளின் தவறான காதலுக்கான காரணமும்... செய்ய வேண்டிய பரிகாரமும்...
    X

    பிள்ளைகளின் தவறான காதலுக்கான காரணமும்... செய்ய வேண்டிய பரிகாரமும்...

    • நாட்டில் 80 சதவீதம் காதல் திருமணம் தோல்வியாகவே முடிகிறது.
    • 10 சதவீதம் பேர் உண்மையாக வாழ்பவர்கள்.

    பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணத்தில் சறுக்கல் ஏற்பட்டால் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் தன் இனத்தவரால் நியாயம் கிடைக்க செய்ய முடியும். சமூதாய அங்கீகாரமும் உண்டு. காதல் திருமணத்திற்கு உறவுகளின் ஆதரவோ, சமுதாய அங்கீகாரமோ நியாய, தர்மமோ இருக்காது.

    பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை, அன்பு, செல்போன் இந்த மூன்றும் தான் பிள்ளைகளின் தவறான காதலுக்கு காரணம். பிள்ளைகளின் திருமண காலம் அறிய ஜோதிடரை அணுகிய பெற்றோர்கள் தற்போது என் குழந்தை தவறான நட்பில் உள்ளது இது சரியாகுமா? சரி செய்ய முடியுமா? என்று கேட்கிறார்கள். ஒரு பிள்ளை தவறான நட்பில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன.

    1. குழந்தைகளின் மேல் உள்ள அதீத அன்பால் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் பெற்றோர்கள் ஆதரிப்பது அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

    2. பல குடும்பங்களில் கணவன்-மனைவி கருத்து வேறுபாட்டால் குழந்தைகளை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள் தவறான நண்பரை தேர்வு செய்கிறார்கள்.

    மூன்றாவது வகை ஒன்று உள்ளது. பணக்கார வரன் என்றால் அந்த வரனை முடிப்பதில் ஆர்வமும் பண வசதி இல்லாத வரன் என்றால் அதை உதாசீனமும் செய்கிறார்கள்.

    பணத்திற்காக தவறை கண்டு கொள்ளாததால் அது விவாகரத்து வரை செல்கிறது. அதே போல் பிள்ளைகளை மட்டும் தவறாக கூற முடியாது. சில குழந்தைகளின் ஜனன ஜாதகத்தில் தவறான நட்பிற்கான கிரக சேர்க்கை இருக்கும் . ஆனால் கோச்சாரமும் தசா புத்தியும் சாதகமாக இல்லாத போது ஜனன கால ஜாதக அமைப்பை வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் குழந்தையின் செயல்களை கண்காணித்து மனதை நோகடித்து தவறான பாதையில் ஈடுபட வைத்து விடுகிறார்கள்.

    நாட்டில் 80 சதவீதம் காதல் திருமணம் தோல்வியாகவே முடிகிறது. இதில் 10சதவீதம் பேர் உண்மையாக வாழ்பவர்கள். மீதம் உள்ள 10 சதவீதம் பேர் தோல்வியை வெளிக்காட்டாமல் நன்றாக வாழ்வது போல் நடிக்கின்றனர்.

    சிலர் வயிற்றில் குழந்தையுடனும், சிலர் கையில் குழந்தையுடனும் விவாகரத்துக்கும் மறு திருமணத்திற்கும் ஒடிக்கொண்டு இருக்கிறார்கள். மறு விவாகமும், விவாகரத்தும் ஒருவரை நிம்மதியாக வாழ விடாது.

    அதனால் பெற்றோர்களே குழந்தைகளின் நண்பர்களாக இருந்து குழந்தைகளை நல்வழிப் படுத்துங்கள். பிள்ளைகளே பெற்றோர்களின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் இதுவே நமக்கு என்றும் நன்மை தரும்.

    பரிகாரம்: குழந்தைகளின் தவறான நட்பால் பிரச்சினைகளை சந்திக்கும் பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுகிழமைகளில் ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.

    Next Story
    ×