search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் கடைசி ஒருநாள் போட்டி- டாஸ் போடுவதில் தாமதம்
    X

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் கடைசி ஒருநாள் போட்டி- டாஸ் போடுவதில் தாமதம்

    • 1 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில் ஈரப்பதம் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • 1.30 மணிக்கு மைதானத்தை நடுவர்கள் ஆய்வு செய்து விட்டு போட்டி தொடங்கும் நேரத்தை அறிவிப்பார்கள்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 1 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில் மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1.30 மணிக்கு மைதானத்தை நடுவர்கள் ஆய்வு செய்து விட்டு போட்டி தொடங்கும் நேரத்தை அறிவிப்பார்கள்.

    Next Story
    ×