search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஜூன் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் ஐசிசி-யின் புதிய விதிமுறை
    X

    ஜூன் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் ஐசிசி-யின் புதிய விதிமுறை

    • ஐசிசி 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
    • கள நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.

    துபாய்:

    ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு விதிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் போட்டி விறுவிறுப்பாக மாறும் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    அதன்படி ஐசிசி 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது. மாற்றப்பட்ட ஐசிசி விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விதி 1: கள நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.

    விதி 2: வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர், பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள பீல்டர்கள் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.

    விதி 3: ப்ரீ ஹிட் பந்தில் பந்து ஸ்டம்பில் பட்டாலும் இனி பேட்ஸ்மேன்கள் ரன் ஓடலாம். அந்த ரன்கள் பேட்ஸ்மேன் கணக்கில் சேரும். இந்த 3 விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி அமலுக்கு வரும் எனவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்த விதிகள் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×