6 மணி படப்பிடிப்புக்கு 5 மணிக்கே வரும் சிம்பு

6 மணி படப்பிடிப்புக்கு 5 மணிக்கே வரும் சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சிம்பு பற்றி பல்வேறு சர்ச்சைகள் வரும் நிலையில், படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்ததை பார்த்து ஆச்சரியமடைந்ததாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். #STR #Simbu
Published on

சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வந்ததுமே மணிரத்னத்தின் நிலை என்ன ஆகப்போகிறதோ என்ற ரீதியில் கிண்டல்கள் வந்தன. ஆனால் இத்தனை நாட்களாய் இருந்த சிம்புவுக்கு நேர் எதிரான சிம்புவை செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பில் பார்த்து இருக்கிறார்கள்.

காலையில் படப்பிடிப்பு என்றால் மாலையில் தான் வருவார். திடீர் என்று படப்பிடிப்பை ரத்து செய்வார் என்று எல்லாம் சிம்புவை குறை சொன்ன நிலையில் சிம்புவின் ஒழுக்கம் பற்றி அரவிந்த்சாமி ஒரு பேட்டியில் விளக்கி உள்ளார்.

‘அவரைப் பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரின் மற்ற படங்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கு அவர் மிகவும் ஒழுக்கமாக இருக்கார். எங்கள் எல்லோருக்கும் முன்பே வந்து அமர்ந்திருப்பார். காலையில் ஆறு மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 5.40க்கு செல்வேன்.

ஆனால் அவர் ஐந்து மணிக்கே வந்து உட்கார்ந்துவிடுவார்’ என்று கூறி இருக்கிறார். இது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் எழுமின் பட விழாவில் சிம்பு பேசும் போது, இனி படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Simbu #CCV

X

Maalai Malar
www.maalaimalar.com