விக்ரமுக்காக பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் விக்ரம் கேட்டதற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
விக்ரம் - சிவகார்த்திகேயன்
விக்ரம் - சிவகார்த்திகேயன்
Published on

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகும் படம் 'ஆதித்ய வர்மா'. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. கிரிசய்யாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  

இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியே பேசி நன்றி தெரிவித்த விக்ரம், தொடர்ந்து படம் உருவாக உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து, "நான் ஒரு போன்தான் பண்ணேன். 'சிவா... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் சிவா, இந்தப் படத்துக்கு ஒரு சாங் எழுதணும்'னு கேட்டேன். அவர் உடனே எழுதித்தந்தார். மற்ற எல்லா பாடல்களிலும் ஓரிரு வரிகளை நாங்க மாற்றினோம். ஆனால், சிவா எழுதிய பாட்டுல மட்டும் எதுவுமே மாற்றவில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com