

கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ள படம் ‘தண்டகன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘சினிமா ஆளுமையுள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிட கூடாது. தமிழ் சினிமாவில் 460 படங்கள் திரைக்கு வராமலேயே இருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கில் பணம் தேங்கியுள்ளது. சினிமாவில் அதிக வருமானம் பெறக்கூடிய கதாநாயகர்கள் ஒன்றுபட்டு திரைத்துறையை காக்க முன்வர வேண்டும்’ என்று கூறினார்.
சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் கூறும்போது, ‘ அரசு தலையிட்டு சிறிய முதலீட்டு படங்களுக்கு 100 திரையரங்குகளை ஒதுக்கித் தர வேண்டும் என்றும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 1000 பேரோடு சேர்ந்து ஊர்வலமாக சென்று அரசுக்கு மனு அளிக்க உள்ளோம்’ என்று கூறினார்.