சினிமா
நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வரும் 'ரூபாய்'
பணத்தின் அருமையும் அதன் முக்கியத்துவமும் நிறைந்தது தான் 'ரூபாய்' படத்தின் சிறப்பு என்று இயக்குநர் அன்பழகன் கூறியிருக்கறார்.
இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரிஷ் உத்தமன், ஆர் என் ஆர் மனோகர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு வீ இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். படம் நீண்ட நாட்கள் பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வரும் படம் பற்றி இயக்குநர் சில சுவாரஸிய விஷயங்களை பகிர்ந்தார்.
பணம் எல்லோருக்கும் அவசியம் தான். அது போதுமானதாகவும் நியாயமான முறையில் சம்பாதித்தால் அது மனத்திற்கு சந்தோசத்தை தரும். அதுவே நியாயமற்ற முறையில் பெற்றால் அது நிறைய சங்கடங்களையும் துன்பங்களையும் தரும் . இதை தான் படத்தில் அனைவரும் பணத்தின் அருமையும், அதன் முக்கியத்துவமும் காண்பித்துள்ளோம்.

