

உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பின் காரணமாகக் காலமானார்.
ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ரஜினி நேற்றே மும்பை சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நடிகர் கமலும் மும்பையில் ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மும்பை செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கு நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன். ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, மும்பை செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.