

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுத்ததற்காக படக்குழுவினரை தணிக்கை குழுவினர் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.