இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யா பாலன் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து வித்யா பாலன் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
Published on

எழுத்தாளர் சகாரியா கோஷ் இந்திரா காந்தியை மையமாக வைத்து ‘இந்திரா இந்தியாவின் மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் உரிமையை வித்யாபாலன் வாங்கி இருக்கிறார்.

இதையடுத்து, அவர் ‘இந்திராகாந்தி’ படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வெளியானது. இது குறித்து கூறியுள்ள வித்யாபாலன், “ ‘இந்திரா’ புத்தகத்தின் உரிமையை வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திராவாக நடிக்க நான் எப்போதும் விரும்பியது உண்டு. இந்த புத்தகத்தை மையமாக வைத்து படம் தயாரிக்கலாமா? அல்லது வெப்சீரியல் தயாரிக்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இரண்டில் ஒன்று நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com