காப்பான் படத்தை வெளியிட தடையில்லை- ஐகோர்ட்டு

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடைகோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சூர்யா
சூர்யா
Published on

சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை படமாக எடுத்திருப்பதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக தெரிவித்து, காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது எனக்கூறி  ஜான் சார்லசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com