

“இந்த படம் மதுரை கதை களத்தில் உருவாகி இருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். அந்த பெயருக்கு ஏற்ப அன்பான பெண்ணாக நடித்து இருக்கிறேன். இதில் நான் முழுமையான மதுரை பெண்ணாகவே மாறி நடித்துள்ளேன்.
இந்த படத்தில், விஜய்சேதுபதியுடன் நடித்திருப்பதை என் வெற்றியாகவே கருதுகிறேன். இதற்கு முன்பு நடித்த 2 படங்களிலும் நானே டப்பிங் பேசினேன். ‘கருப்பன்’ படம் முழுக்க முழுக்க மதுரை மண்வாசனை கதையில் உருவாகி இருக்கிறது.