பொது சாலையில் சோதனை செய்யப்படும் தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள்

ஐக்கிய ராஜ்ஜியத்தின் பொது சாலைகளில் தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
ஆரிகோ எலெக்ட்ரிக் பேருந்து
ஆரிகோ எலெக்ட்ரிக் பேருந்து
Published on

ஐக்கிய ராஜ்ஜியத்தில் பயணிகள் வாகனம் மட்டுமின்றி பொது போக்குவரத்து முறைகளிலும் தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. சமீபத்தில் தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் பொது சாலையில் சோதனை செய்யும் திட்டம் இங்கு துவங்கப்பட்டு இருக்கிறது.  

ஆரிகோ ஆட்டோ ஷட்டில் என அழைக்கப்படும் இந்த விசேஷ பேருந்துகள் கேம்ப்ரிட்ஜ் நகரில் சிறப்பு சோதனை செய்யப்படுகிறது. இந்த தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்து 3.2 கிலோமீட்டர் வழிதடத்தில் சென்றுவரும். சோதனையின் போது தேர்வு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பேருந்தினுள் அனுமதிக்கப்படுவர். 

இதற்காக பயணிகள் ஆரிகோ செயலியை பயன்படுத்தி எங்கு ஏற வேண்டும், எங்கு இறங்க வேண்டும் என்ற விவரங்களை பதிவிட வேண்டும். ஆரிகோ தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் மணிக்கு அதிகபட்சம் 32 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஒவ்வொரு பேருந்திலும் ஒரே சமயத்தில் பத்து பயணிகள் பயணம் செய்ய முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com