இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி முன்பதிவு துவக்கம்

ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காருக்கான முன்பதிவுகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா சிட்டி
ஹோண்டா சிட்டி
Published on

இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரமும், விற்பனையகம் செல்வோர் ரூ. 21 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும்.

ஜூன் 23 ஆம் தேதி முதல் ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா சிட்டி கார்களை விற்பனையகங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை துவங்கியது. இந்தியாவில் தற்தமயம் சுமார் 300 ஹோண்டா விற்பனை மையங்கள் செயல்பாட்டில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com