எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.ஜி. இசட்.எஸ்.
எம்.ஜி. இசட்.எஸ்.
Published on

எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்.எஸ். இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இசட்.எஸ். இ.வி. கார் இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காருடன் விற்பனை செய்யப்படுகிறது. 

புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் விற்பனைக்கு வருகிறது. வெளியீட்டுக்கு முன் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் புதிய காரின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தயில் புதிய கார் இசட்.எஸ். இ.வி. என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் புதிய காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹீட்டெட் முன்புற இருக்கைகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஃபோர்டம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் 50 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் குர்கிராமில் துவங்கியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com