சர்வதேச சந்தையில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கும் ஃபெராரி

முன்னணி சூப்பர்கார் உற்பத்தியாளரான ஃபெராரி நிறுவனம் சர்வதேச சந்தையில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபெராரி சூப்பர் கார்
ஃபெராரி சூப்பர் கார்
Published on

இத்தாலியை சேர்ந்த சூப்பர்கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபெராரி சர்வதேச சந்தையில் இரண்டு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வரும் முன் புதிய கார் வெளியீட்டு விவரங்களை ஃபெராரி வெளிப்படுத்தி இருந்ததாக தெரிகிறது.  

ஃபெராரி நிறுவனம் விரைவில் மரநெல்லோ ஆலையின் பணிகளை துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இரு புதிய மாடல்களை வெளியிடுவது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இரு மாடல்களும் ஃபெராரி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களின் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டிற்குள் ஃபெராரி நிறுவனம் மொத்தம் 15 புதிய மாடல்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டத்தை ஃபெராரி நிறுவனம் கடந்த ஆண்டு வாக்கில் உருவாக்கியதாக தெரிகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ஃபெராரி எஃப்8 டிரிபுடோ, எஸ்எஃப்90 ஸ்டிரான்டேல் மற்றும் ரோமா என மூன்று புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய கார் மாடல்கள் பற்றிய விவரங்களை ஃபெராரி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. இரு புதிய மாடல்களை ஃபெராரி நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு வரும் மாதங்களில் எந்தளவு சீராகிறது என்பதை பொருத்தே புதிய மாடல்கள் அறிமுகமாவது பற்றிய முடிவு எட்டப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com