ஷாட்ஸ்

ஜெயலலிதாவுக்கு நடைபெற்ற கோரமான காட்சி உண்மைதான்- எடப்பாடி பழனிசாமி

Published On 2023-08-13 12:56 IST   |   Update On 2023-08-13 13:00:00 IST

1989-ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் நடைபெறவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், ஒத்திகை பார்த்து ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் உண்மைதான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவறான தகவலை, பொய்யான தகவலை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிட்டிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத்தில் மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகுட்டுவார்கள்.

Similar News