விளையாட்டு

ஸ்ரீகாந்த் கிடாம்பி

இந்திய ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஸ்ரீகாந்த் கிடாம்பி

Published On 2023-01-18 18:12 GMT   |   Update On 2023-01-18 18:12 GMT
  • இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
  • இன்று நடந்த போட்டியில் ஶ்ரீகாந்த் கிடாம்பி, விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.

புதுடெல்லி:

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் கிடாம்பி 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News