விளையாட்டு
சையத் மோடி பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் கிடாம்பி, எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்ரையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாடு வீரர் கவின் தங்கம் உடன் மோதினார்.
இதில் கிடாம்பி அதிரடியாக ஆடி 21-13, 21-10 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 21-15, 21-10 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ஷஷ்வத் தலாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.