விளையாட்டு

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

Published On 2024-01-21 00:44 GMT   |   Update On 2024-01-21 00:44 GMT
  • இந்தியா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
  • இதில் மலேசியா ஜோடியை வென்று இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

புதுடெல்லி:

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்துவருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியுடன் மோதியது.

இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர்செட்டில் மலேசிய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Tags:    

Similar News