விளையாட்டு
சையத் மோடி பேட்மிண்டன்: இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சக நாட்டின் ஜெனித் அபிகைல்-லிதிகா ஸ்ரீவஸ்தவா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 21-12 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.