கிரிக்கெட் (Cricket)
null

இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்தால், அவர்களை வீழ்த்துவது உறுதி: ஷாஹீன் அப்ரிடி சூளுரை

Published On 2025-09-24 18:10 IST   |   Update On 2025-09-24 18:10:00 IST
  • நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசிய கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம்.
  • எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.

இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இந்தியா இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டியுள்ளது. இரண்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைவோம் என்ற நம்பிக்கை பாகிஸ்தானுக்கு உள்ளது.

இந்த நிலையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அவர்களை வீழ்த்துவோம் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷாஹீன் அப்ரிடி கூறியதாவது:-

இந்தியா இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்போது பாரப்போம். நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசிய கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம். எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயார். அவர்களை நாங்கள் வீழ்த்துவோம்.

இவ்வாறு ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News